×

உத்தமபாளையம் அருகே போர்வெல் லாரியில் இருந்து தவறி விழுந்தவர் பலி: டிரைவர் கைது

உத்தமபாளையம், மே 9: உத்தமபாளையம் அருகே போர்வெல் லாரியில் இருந்து தவறி விழுந்த ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் எரியோடு செங்கோட்டைg;பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் திருச்செங்கோடு போர்வெல் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தின் லாரி தேனி மாவட்டத்தில் தற்போது நிறுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதன்படி தினந்தோறும் லாரியில் செல்லும் மனோகரன் இரவில் அதனை க.புதுப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வருசநாடு பகுதியில் போர்வெல் அமைப்பதற்காக அவரது லாரி சென்றுள்ளது.

பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு போர்வெல் லாரி க.புதுப்பட்டிக்கு திரும்பி வந்துள்ளது. அதன் டிரைவரான திம்மரசநாயக்கனூரை சேர்ந்த முருகன் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்துவதற்காக லாரியை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, லாரியில் இருந்த மாரியப்பன் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்னர். பினனர் உயர் சிகிச்சைக்காக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் முருகனை கைது செய்தனர்.

The post உத்தமபாளையம் அருகே போர்வெல் லாரியில் இருந்து தவறி விழுந்தவர் பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Borwell ,Uttampalayam ,Utthampalayam ,Mariyappan ,Patti village ,Eriodu Sengottaig, Dindigul district ,Tiruchengode Borewell Company ,Uttamapalayam ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...